To do nothing is to be nothing. Nothing ventured is nothing gained
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்பதற்கமைய விக்கித்திட்டங்கள் வளர்கின்றன.
பொதுவாக நம் ஊரில் ஒரு நல்ல காரியம் நடந்தால் கூட்டம் குறைவாக இருக்கும். சிலரே கூடியிருக்கின்றார்கள் என்றால் அங்கு ஏதோ நல்ல காரியம் நடக்கின்றது என்று பொருள். ஆனால் இங்கு விழாவில் கூட்டம் அதிகமாகவும் உள்ளது நடப்பது நல்ல காரியமாகவும் உள்ளது
ஓர் ஊரில் ஒரு கோடீஸ்வரர் சந்நியாசி ஆக மிகவும் ஆசைப்பட்டார். ஒரு மடத்தில் சென்று தலைமைத் துறவியைச் சந்தித்தார். “சாமி என்னிடமுள்ள எல்லாவற்றையும் செலவு செய்துவிட்டுச் சந்தியாசியாக விரும்புகின்றேன். எனக்கு யோசனை சொல்லுங்கள்” என்றார்.
“உன் பணத்தை வைத்து ஒரு கோவில் கட்டிவிடு பணம் தீர்ந்துவிடும். பிறகு என்னிடம் வா” என்றார் தலைமைத் துறவி. கோவில் கட்டினார். ஆனால் உண்டியலில் பணம் நிரம்பி வழிந்தது. அவரிடம் முன்பு இருந்ததை விட அதிகப் பணம் சேர்ந்துவிட்டது. செலவு செய்யமுடியாது மீண்டும் சுவாமியிடம் சென்று , “இப்பணத்தை என்ன செய்வது?” என்று கேட்டார்.
“ஒரு குளம் வெட்டு” என்றார் சுவாமி. கிணறு வெட்டிய அவருக்குப் புதையல் கிடைத்தது. மீண்டும் பணம் பெருகியது சுவாமிகளிடம் சென்றார்.
“நல்ல காரியம் செய்தால்தான் பணம் சேர்கின்றது ஏதாவது கெட்டகாரியம் செய்” என்றார் சுவாமிகள். இவர் சீட்டு விளையாடினார் அதில் வெற்றிதான்; குதிரைப் பந்தயத்திற்குச் சென்றார் அங்கும் இவர் பணம் கட்டிய குதிரை முன்னே வந்தது. இப்படி எல்லாம் செய்தும் பணம் கூடியதே தவிரக் குறையவில்லை. மீண்டும் சந்நியாசியிடம் போனார்.
இந்தமுறை யோசித்துவிட்டு சந்தியாசி கோடீஸ்வரரை அருகில் அழைத்தார். காதோடு காதாக, “இப்படிச் செலவு செய்துவிட்டு வா” என்றார். போனவர் ஓரிரண்டு மாதங்களில் உண்மையிலேயே சந்நியாசியாகிப் பிட்சைப் பாத்திரத்துடன் சுவாமிகளைக் காணவந்தார். சீடர்களுக்கு ஒரே ஆச்சரியம் “சுவாமிகளே, கடைசியாக என்ன யோசனை கூறினீர்கள்?” என்று குருவிடம் கேட்டார்கள்.
“ஒன்றுமில்லை தமிழில் ஒரு நல்ல ஆன்மீகப் பத்திரிகை ஆரம்பித்து நடத்தச் சொன்னேன். அவரும் செய்தார். அதனால்தான் இப்படியாகிவிட்டார்.
தென்னகச்சியின் நண்பர் சு.சமுத்திரம் ஒருநாள் புத்தகக் கண்காட்சியில் தென்னகச்சியைப் பார்த்து உன் புத்தங்கள் நிறைய விற்பனையாகின்றன. நீ என்ன அவ்வளவு மோசமாகவா எழுதுகின்றாய்? என்று கேட்டார். ஒரு நூல் அதிகம் விற்க வேண்டும் என்றால் மோசமாக எழுத வேண்டும் என்பதுபோல் அவர் கேட்டார். இந்தக் கால நிலைமை அப்படி.
“நாங்கள் சாதாரணமாக Hard Disk Format செய்து Partition செய்துள்ளேன் ஆனால் புதிதாக வந்துள்ள SATA Hard Disk format செய்யவோ Partition செய்யவோ இயலவில்லை. அதாவது CMOS Setup 1st boot CD ROM இல் இட்டும் Press any key to boot from CD வரும் போதும் format செய்யவோ Partition செய்யவோ முடியவில்லை. அதற்கான வழிமுறைகள் வேறு ஏதாவது பயன்படுத்தவேண்டியதாயின் அந்த விபரத்தையும் அறியத் தருமாறு வேண்டுகின்றேன்.” இ.சிவகுமார், அக்கரைப்பற்று.
என்னுடைய பதில்: (பிஸிடைம்ஸின் விடைக்கு அச்சஞ்சிகையைப் பார்க்க)
எல்லா மதபோட்களும் (Mother Board) சாட்ட ஹாட்டிஸ்களை விண்டோஸ் நிறுவலின்போது சரியாக இனம் காணும் என்பதற்கில்லை. இவ்வாறான விண்டோஸ் இனம் காணமுடியாதவற்றில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவும் போது ஓர் பிளாப்பி டிஸ்க் ஊடாக டிவைஸ் டிரைவர்களை (நிறுவலின் போது F6 கீயை) கேட்கும் பட்சத்தில் அழுத்து பிளாப்பியில் டிவைஸ் டிரைவர்களை வழங்கி நிறுவலை ஆரம்பிக்கலாம். இதை பிளாப்பி டிஸ்க் டிரைவர்களை உருவாக்குவதற்கென மதபோட்டுடன் வரும் சீடியில் (இறுவட்டில்) வசதிகள் தரப்பட்டிருக்கும். சில சமயங்களில் மதபோட் சீடியானது தொலைந்தோ அல்லது கணினியை அசெம்பிள் செய்தவர் தராமலோ இருக்கக் கூடும். மதபோட்டைத் தயாரித்தவர்களின் இணையத்தளத்தில் இவ்வாறான டிவைஸ் டிரைவர்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக்கூடியதா இருக்கும். மேற்கண்ட எதுவுமே சரிவரவில்லையென்றால் (எடுத்துக்காட்டாக கணினியில் பிளாப்பி டிரைவ் இல்லை அல்லது பிளாப்பி டிரைவ் வேலைசெய்யவில்லை) இவ்வாறான சந்தர்பங்களில் விண்டோஸ் இயங்குதளத்துடன் “Mass Storage Device Drivers” களை ஒருங்கிணைப்பதன் மூலம் நிறுவல்களை வெற்றிகரமாக நிறுவ முடியும். இதற்கு driverpacks.net இணையத்தளத்தினைப் பார்வையிடவும். அதில் Massstorage தேர்ந்தெடுத்து விண்டோஸ் நிறுவலுடன் சேர்த்துக் கொண்டால் நிறுவலை வெற்றிகரமாக செய்யலாம்.
Add விக்கிபீடியா மனிதர்களின் கூட்டு முயற்சி to your personalized My Yahoo! page: